Skip to main content

திருச்சியில் அடுத்தடுத்து கரோனா மரணம்!!! சந்தேகம் கிளப்பும் பொதுமக்கள்!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
corona

 

 

திருச்சியில் இன்று ஒரு நாளில் மட்டும் 4 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 77 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இப்படி நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் மரணங்களும் அதிகரித்துள்ளன. திருச்சியில் கரோனா தொற்றினால் ஏற்படும் மரணத்தை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்..

 

திருச்சி மாநகர அதிமுக தில்லைநகர் பகுதி செயலாளராக இருப்பவர் முஸ்தா. இவருடைய மனைவி ரகமத்துனிஷா கரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். வீட்டு சென்ற அவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்து இருக்கிறார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டும் காய்ச்சல் குறையாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் அதிகமானவும் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அறிகுறியுடன் வந்தபோதே அவருக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் பிழைத்திப்பார் என்று அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

 

38 வயதான திருமதி சுமதி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார், அவருக்கு கடந்த வியாழக்கிழமையன்று எந்தவித அறிகுறியும் இல்லாத மிக லேசான காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவரை அவரது கணவர் ரயில்வே மருத்துவமனையில் இதன் சம்பந்தமாக எந்த விதமான வசதிகளும் முன்னேற்பாடுகளும் தற்போது வரை  ஏற்பாடு செய்யாத காரணத்தினால் சுமதியின் கணவர் வெங்கடேஷ் திருச்சியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

திருச்சி தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைபாடு உள்ள காரணத்தினால் எந்த மருத்துவமனையில் அவரை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சுமதியை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளி அன்று சேர்த்துள்ளார். அன்று அவருக்கு எந்தவிதமான மருத்துவ உதவியும் அங்குள்ள மருத்துவர்களால் உடனடியாக செய்யப்படவில்லை.

 

சுமதிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கு வெண்டிலட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது பாதியிலே கழன்று இருப்பது தெரிந்து அதை மருத்துவரிடம் சொல்லியிருக்கிறார். அதை சரி செய்வதற்குள்ளாகவே எந்த முன்னேற்றம் எதுவும் கணவர் வெங்கடேஷ் கண் முன்னே மனைவியை பறிகொடுத்து இருக்கிறார்கள்.  

 

இந்த அலட்சிய மரணம் குறித்து திருச்சி கோட்ட DREU-CITU இன்று பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.

 

இது குறித்து திருச்சி கோட்ட DREU-CITU தெரிவிப்பது:  

 

ரயில்வே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த ஒரு ஊழியருக்கு இந்த நிலைமை என்றால் commercial, Traffic, Engineering, DRM office ஆகியவற்றில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு   நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற இதுவரை எந்தவிதமான முன்னேற்பாடோ, வசதியோ ரயில்வே மருத்துவமனையில் செய்யவில்லை என்பதை சுமதி இறப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி கோட்டத்தின் அலட்சிய போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு தொழிலாளி உயிரின் மதிப்பு விலைமதிப்பற்றது என்பதை நிர்வாகம் புரிந்துகொண்டு மிக விரைவில் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துப் போராட்டம் நடத்தினர்.

 

woman lost life because of carelessness in trichy

 

இதேபோன்று திருச்சியில் மேலாண்மை இயக்குநராக இருப்பவர் சோம்புரா. இவருக்கு வயது 54. இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கரோனோ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். ஆனால் முடிவு வந்து சேரவில்லை. எனினும் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு 3 நாட்கள் கழித்து மீண்டும் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் திடீர் என அரசு மருத்துமனையில இருந்து சோம்புராவுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு கரோனோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி அவரை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். பின்பு அவரை பரிசோதனை செய்து விட்டு நோய் குணமடைந்து விட்டது என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

 

எப்படி அதற்குள்ளாக குணமாகியிருப்பார், இதேபோன்று குளித்தலை அருகே உள்ள மேட்டுபட்டியை சேர்ந்தவர் எம்.கே.பிச்சை. இவர் திடீர் என காய்ச்சல் அடித்ததால் உடனே வீட்டில் தனிமைப்படுத்தி இருந்திருக்கிறார்கள். இதற்கு இடையில் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் திருச்சி அரசு மருத்துனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அனுமதித்த அடுத்த நாள் கரோனா பரிசோதனை செய்திருக்கிறார். பரிசோதனை செய்த அடுத்த நாள் காலையில் திடீர் என சிகிச்சை பலன் இன்றி இறந்திருக்கிறார். உடனே அவர்கள் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்து திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் உடலை எரிக்க வைத்தனர். ஆனால் அவருக்கு கரோனோ தொற்று உறுதியா, இல்லை என்பதை கடைசி வரை சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதனால் ஊர்மக்கள் எம்.கே.பிச்சைக்கு கரோனா  தொற்று உள்ளதா, இல்லையா என்பதே தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.