Skip to main content

அரசு அதிகாரிகளின் சுதாகரிப்பால் சிக்கிய மூவர்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Three trapped by government officials!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் தொடர் மழைப் பொழிவு இருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர் வகைகள் நாசமாகின. பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையைப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவரவர் பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், வேளாண்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும். அப்படி அளிக்கும்போது நிலத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து முறைப்படி பெற்று மனுவுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்வார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு நிவாரணம் பெறுவதற்கு இந்த வழிமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. 

 

இதை பயன்படுத்திக்கொண்டு முறைகேடான வழியில் நிவாரணம் பெறுவதற்காக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, முருகன், ஐயனார், அருண், மஞ்சுளா ஆகியோர் அவர்களது பகுதி கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து, அவர் பயன்படுத்தும் முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்து அதற்கான ஆவணங்களைத் தயார் செய்து மனுவுடன் இணைத்து வேளாண்மைத் துறை அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். 

 

அதைப் பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை வரவழைத்து அவர் முன்னிலையில் அந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட திருக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, ஆவணங்கள் தயாரித்த மேற்படி ஐவர் மீதும் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தியதில் மேற்படி நபர்கள் போலி ஆவணம் தயார் செய்தது உண்மை என தெரியவந்துள்ளது. 

 

அதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மஞ்சுளா, தண்டபாணி, அய்யனார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேற்கொண்டு தலைமறைவாக உள்ள அருண், முருகன் ஆகியோரை தீவிரமாக தேடிவருகின்றனர். அரசு உதவிபெற போலி ஆவணம் தயாரித்து போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.