Skip to main content

மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Sand sss



கடல்மணலை கொள்ளை அடித்த கும்பலை தடுத்த அரசு பெண் அதிகாரியை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையர்களை அடித்து உதைத்து காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.
 

நாகப்பட்டினத்திற்கு அடுத்த நாகூர் கடற்கரையில் கடல் மணலையும் குறிவைத்து கொள்ளையடிக்கிறார்கள் என கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து  தொடர்ந்து புகார் சென்றிருக்கிறது. இந்நிலையில் ஜே.சி.பி. இயந்திரத்தைக்கொண்டு டிராக்டர்கள் மூலம் நாகூர் கடற்கரையில் மணல் எடுப்பதாக இன்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 
 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள் மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணல் கடத்திய கும்பல், மறித்த அதிகாரியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்த அதிகாரி அவர்களை மீண்டும் விரட்டி மடக்கி பிடித்தார். பிடிபட்ட மணல் கடத்தல் கும்பல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் கடல் மணலை ஏற்றி வந்த கும்பலை அடித்து உதைத்து கைது செய்தனர். மணல் ஏற்றிவந்த வாகனங்களை காவல்நிலையம் கொண்டுவர அந்த கும்பல் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் காவல்துறையினரே வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டி வந்தனர். 
 

இது குறித்து காக்கிகள் கூறுகையில், "கடல் மணலை ஆற்றுமணல் எனக்கூறி விற்கின்றனர்.  கடல் மணலோடு நிலத்தடி மணலை கலப்படம் செய்து ஆற்றுமணல் என அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக்கொண்ட மணல் மாஃபியாக்கள் அதிகாரிகளின் உதவியோடு நிலத்தடி மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.  பிறகு  ஆறுகள், குளங்களில் உள்ள மணலை கொள்ளையடித்தனர். சமீபகாலமாக மணல் கடத்தலில் மணல் மாஃபியாக்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் ஆரம்பத்தில் லாரிகள் மூலமும் பிறகு டிராக்டர் மாட்டுவண்டி மூலமும் அதன் பிறகு டாடா ஏஸ், டூவீலர் என மணலை கடத்திவந்தார்கள். சமீப காலமாக ஆறுகளில் தண்ணீர் வந்ததால் படகுகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மிஞ்சும் வகையில் கடலோரத்தில் இருக்கின்ற கடல் மணலை இயந்திரம் மூலம் அள்ளி வந்து இதுதான் ஆற்று மணல் என அப்பாவி மக்களிடம் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாததுமாக இருந்து விடுகின்றனர். இந்த நிலையில் இன்று நாகூரில் பிடிபட்டுள்ளனர் என்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.