Skip to main content

கனமழையால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Thousands of paddy bundles damaged at heavy rains

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் தமிழ்நாடு அரசின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பனை செய்வதற்காக, நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சாக்கு பற்றாக்குறையினால், கடந்த ஒரு மாத காலமாக 20,000- க்கும் மேலான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.

 

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையினால், வயலூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த, சுமார் 3,000 நெல் மூட்டைகள் முற்றிலுமாக மழையில் நனைந்தும், மழை நீர் உட்புகுந்தும் சேதமாகியுள்ளது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதையும், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதையும், கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஒரு மாத காலமாக காத்துக் கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மறு முளைப்புத் தன்மை ஏற்பட்டும், எலிகளின் தொல்லையால் நெல்மணிகள் மண்ணோடு கலந்து எதற்கும் பயன்படாத வகையில் சேதமடைந்தும் உள்ள நிலையில், தற்போது மழையினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டதாக வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

 

Thousands of paddy bundles damaged at heavy rains

மாவட்ட நிர்வாகம் மற்றும் நிலைய அதிகாரிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தார் பாய்கள் தராமல் போனதாலும், சம தளமான அல்லது சிமெண்ட் தரை தளத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் அமைக்கப்படாமல் போனதாலும், இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  

 

உர விலை உயர்வு, வாகனக் கூலி, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு 20,000 முதல் 30,000 வரை செலவு செய்துள்ள நிலையில், தற்போது மூட்டை ஒன்று 900 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுவதால், தாங்கள் செய்த முதலீடு கூட எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் மழையில் நனைந்த நெல் மணிகளை கூலி ஆட்களைக் கொண்டு உலர்த்தும் பணியினை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

Thousands of paddy bundles damaged at heavy rains

மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை காரணம் காட்டி விலை குறைப்பைத் தவிர்க்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.