Skip to main content

சாலை மறியல், ஆயிரக்கணக்கானோர் கைது!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

6வது நாளாக நடந்து வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் 9 அம்ச கோரிக்கைகளின் போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

 

Thousands detained

 

Thousands detained

 

 

நெல்லை மாவட்டத்தின் அனைத்து நகரிலுள்ள ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் தலைமையில் திரண்ட அரசு ஊழியர்கள் ஆசிரிய ஆசிரியைகள் இன்று நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு கூடினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவர்கள். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் இதில் 1260 பேர் கைது செய்யப்பட்டதில் 650 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்ப மனுக்களும் பலர் கல்வித்துறையில் கொடுத்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்