Skip to main content

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்... திருமா, ஜவாஹிருல்லா, உதயநிதி உள்ளிட்டோர் ஆதரவு! 

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 51 நாட்களாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து நூதன முறையில் அறவழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நூதனமாக செய்து வருகிறார்கள்.

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

இந்நிலையில் இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களின் விடுதியில் உணவைத் தடை செய்தது. அதேபோல் மின்சாரம், குடிநீர் ஆகியவற்றையும் நிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று (27.01.2021) திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களின் போராட்டக் களத்தில் இணையவழி வாயிலாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

Thirumavalavan, Jawaharlal Nehru, Udayanithi Stalin among others support Chidambaram Medical College students' struggle online

 

அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாணவர்களுக்கு இணையவழியில் ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்களின் ஜனநாயக முறையான நியாயமான போராட்டத்தை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். மாணவர்கள் வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும். ஒருபுறம் விவசாயிகள் போராட்டம், மறுபுறம் மாணவர்கள் போராட்டம் மிகவும் வேதனை அளிக்கிறது. மாணவர்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் நிறுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. விரைவில் மாணவர்களை போராட்டக் களத்தில் சந்தித்துப் பேச உள்ளதாக கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவர்களுக்கு ஆறுதல் கூறி பேசுகையில், “மருத்துவ மாணவர்கள் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அரசு அழைத்து பேசாதது பேராபத்தை விளைவிக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விடுதியில் உணவு, குடிநீர், மின்சாரம் தடை செய்ததை வன்மையாக மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து விதத்திலும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்,” என அவர் இணையவழியில்  ஆதரவு தெரிவித்தார்.

 

ஆளுங்கட்சியை தவிர மற்ற அனைவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மற்றும் அமைச்சரிடம் அழைத்து செல்வதாக மாணவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் மாணவர்களோ கடந்த 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், ‘எந்த ஒரு தீர்வும் இல்லாமல் எப்படி போராட்டத்தை கைவிட முடியும்’ என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து இன்று (28.01.2021) தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாள கருப்புக்கொடி ஏந்தி பணி செய்வது மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.