Skip to main content

திருட்டு வண்டியில் வந்த திருடன்... 39 வாகனங்களை மீட்ட காவல்துறையினர்!

Published on 17/07/2021 | Edited on 19/07/2021
The thief who came in the theft cart ... Police recovered 39 vehicles

 

திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும் காவல்துறை ஆணையர் அருண் கடந்த சில மாதங்களில் திருச்சி மாநகரில் காணாமல் போன மொத்த 39 இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கை தனிப்படை அமைத்து தீர விசாரித்து குற்றவாளியை பிடித்துள்ளார். திருச்சி மாநகரில் இதுவரை நடைபெற்ற இரு சக்கர வாகன திருட்டில் தொடர்புடைய அவரை மாநகர காவல்துறை ஆணையர் இன் தனிப்படை கடந்த 3 மாதகாலமாக கண்காணித்து இன்று கைது செய்துள்ளது. 

 

மேலும் அவரிடம் இருந்து 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் பொது இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது காணாமல் போன நிலையில், உறையூர், தில்லைநகர், கன்டோண்மென்ட், கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.  இதுதொடர்பாக  நடவடிக்கை எடுக்க  திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. 

 

The thief who came in the theft cart ... Police recovered 39 vehicles

 

தனிப்படை திருச்சி கோட்டை தேவதானம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், திருச்சி   ராம்ஜிநகர் அருகே உள்ள புங்கனூர் காந்தி நகரை சேர்ந்த கிரிநாதன் (வயது 44) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடிக் கொண்டு வந்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார்  நடத்திய விசாரணையில், அவர் மாநகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பைக்குகளை திருடியது தெரிய வந்தது. 

 

இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் 26 மோட்டார் சைக்கிள்கள், 13 மொபட்டுகள் உட்பட 39 வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 39 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தியும், ஆன்பாரை சட்டென்று திருப்பி லாக்கை உடைத்தும் திருடி உள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என கிரிநாதனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிள்களை அதன்  உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேரில் வரவழைத்து வாகனங்களை அடையாளம் காட்ட செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே போல கோட்டை போலீசார் ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் பணி இன்று நடைபெற்றது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.