Skip to main content

வேப்பூர் பகுதியை கலக்கி வந்த திருட்டு கும்பலின் தலைவன் கைது! 

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் காவல்நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

வேப்பூரில் ஐந்து வீடுகளில் கொள்ளை, களத்தூர் கிராமத்தில் இரு வீடுகளில் கொள்ளை என

அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. கடந்த 21-ஆம் தேதி இரவு நல்லூர் அக்ரஹார தெருவில் ஆசிரியை தேன்மொழியின் வீட்டு பின்பக்க கதவு வழியாக வீட்டினுள்ள புகுந்த கொள்ளையர்கள் அவரது  10 பவுன் தாலிச்செயினை  பறித்து சென்றனர்.
 

 Theft in Vepur.. people report at police station

 

இந்த சம்பவங்களின் அடிப்படையில் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிநவ்ஸ்ரீ உத்தரவின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மேற்பார்வையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அதையடுத்து இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ஐவதுகுடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
 

விசாரணையில் சுப்பிரமணியன்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தனது மைத்துனரான சஞ்சய்காந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து நல்லூர் தேன்மொழி,  சேப்பாக்கம் செல்வி,  கீழ்ஒரத்தூர் சந்தியா, நாரையூர் ரவிச்சந்திரன், கொத்தனூர் ரவிச்சந்திரன், ஆதியூர் தீபிகா, எ.கொளத்தூர் கோவிந்தராஜ் மற்றும் எழிலரசி உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.  

மேலும் விசாரணையின் போது சுப்பரமணியன், ஒரு ஊருக்கு திருட செல்வதற்கு முன்பாக பகல் நேரங்களில் காய்கறிகள்,  பாத்திரங்கள் விற்பது போல சென்று வீடுகளை நோட்டமிட்டு பின்னர் இரவு நேரங்களில் திருடியதாக கூறியுள்ளார். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சுப்பிரமணியத்திடம் இருந்து 84 கிராம் தங்கம் கால் கிலோ வெள்ளி கொலுசுகள் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கெங்கு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். அவரது கூட்டாளியான மணிகண்டன் மற்றும் சஞ்சய் காந்தியும் தேடிவருகின்றனர். 

 

 Theft in Vepur.. people report at police station

 

அதேசமயம் வேப்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஐந்து வீடுகளில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றை கொள்ளையடித்த கும்பலை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை தற்போது பிடிபட்டுள்ள கும்பலுக்கும் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என தெரியவில்லை. அந்த கொள்ளைகள் குறித்து விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே சுப்பரமணியன் மற்றும் கூட்டாளிகள் மீதான திருட்டு  வழக்குகள் பொய்யானவை என  சுப்பரமணயனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.