Skip to main content

மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர்; உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரி 

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

teacher suspended who employed students

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள ஆலம்பூண்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையிலான திறனறிவு தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள் பள்ளியில் இல்லாததால் அருகில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இருந்து மேஜை நாற்காலிகளை தற்காலிக தேவைக்காக இரவல் பெற்றுள்ளனர். தேர்வு முடிவடைந்த நிலையில் இரவலாக பெறப்பட்ட மேஜை, நாற்காலிகளை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காக ஆலம்பூண்டி பள்ளியில் இருந்து ஒரு விவசாய டிராக்டரில் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றியுள்ளனர்.

 

அவை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவும், அந்தப் பள்ளியில் கொண்டு போய் இறக்கி வைக்கும் பணிக்காகவும் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அந்த வாகனத்தில் ஏற்றி ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர். டிராக்டரில் நின்றபடி மேஜை நாற்காலிகள் சாலையில் விழுந்து விடாமல் இருப்பதற்காக பிடித்துக்கொண்டே மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

இந்த நிலையில் மாணவர்களை டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைத்ததற்காக ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.  இந்தப் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் அனுப்பி வைத்தது தவறாக இருக்கலாம். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகளைக் கொண்டு பள்ளியை கூட்டிப் பெருக்கியதற்காகவும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி தோட்டம் அமைத்ததற்காகவும் ஆசிரியர்கள் மீது கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.