Skip to main content

'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

tamilnadu rains regional meteorological centre in chennai

 

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதேபோல், அடுத்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் (கோவை)- 7 செ.மீ., திருச்சுழி, குன்னூர், திருப்பூர், தலா 5 செ.மீ., ராஜப்பாளையம் (விருதுநகர்)- 4 செ.மீ., ஸ்ரீ வில்லிப்புத்தூர், அனந்தபுரம் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்