Skip to main content

ஊரடங்கு மீறல்- 1.97 லட்சம் பேர் கைதாகி விடுதலை!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 

tamilnadu curfew police peoples vehicles


இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி  வாகனங்களில் வெளியே சுற்றிய 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 82,32,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக 1,84,748 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்