Skip to main content

'முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 399.93 கோடி' - தமிழக அரசு!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

tamilnadu cm relief fund coronavirus prevention tn govt

 

கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 399.93 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "21/07/2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது. தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் ரூபாய் 1 கோடி, நீதித்துறை பணியாளர்கள் சார்பில் ரூபாய் 49.56 லட்சம், கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாரத்தான் சார்பில் ரூபாய் 23.41 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

 

07/10/2020 முடிய முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூபாய் 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும்". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்