Skip to main content

ஆர்டிஐ- க்கான இணைய தளத்தை உருவாக்காத தமிழக அரசு!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

ஆர்டிஐ என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RIGHT TO INFORMATION ACT -2005) ஆகும். மத்திய அரசின் கீழ் உள்ள துறைகளிடம் கேள்வி எழுப்ப விரும்பினால் மத்திய அரசு அதற்கான இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசிடம் துறை சார்ந்த மற்றும் செலவிடப்படும் நிதி குறித்த தகவல்களை பெற விரும்பும் பட்சத்தில் தமிழக மக்கள் கடிதம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு (RTI APPLICATION) செய்யும் மக்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட அலுவலகம் பதிலளிக்காததும், மனுதாரர் தனது மனுவின் நிலையை குறித்து அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு என்று தனி இணைய தளம் உருவாக்காதது தான். குறிப்பாக தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வேண்டி ஒருவர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஐ அலுவலரிடம்  விண்ணப்பித்தால் , மனுதாரருக்கு பதில் மனு சென்றடைய சுமார் 60 நாட்கள் ஆகிறது.

 

RTI

 

 

இதனால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் ஏன் ஆர்டிஐ-க்கென்று இணையதளம் உருவாக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதனைத்  தொடர்ந்து ஆன்லைன் மூலம் ஆர்டிஐக்கு விண்ணப்பிக்கும் முறையை  தமிழக அரசு கொண்டு வரும் பட்சத்தில் ஆர்டிஐ-ன் சட்டத்தின் கீழ் எளிதாக மக்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் சம்மந்தப்பட்ட மனு தாரர்களுக்கு குறைந்த பட்சம் 10 நாட்களில் அரசு எளிதாக பதில் கடிதம் அளிக்க முடியும். அதே போல் ஆர்டிஐ சட்டத்திற்கு மேலும் வலுவூட்ட முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே தமிழக அரசு ஆர்டிஐ-க்கென்று தனி இணையதளம் உருவாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.