Skip to main content

திடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ், இது தமிழக இளைஞர்கள் மத்தியில் ரொம்ப பிரபலமான நிகழ்ச்சி.இதில் பிக் பாஸ் சீசனில் நடிகை ஓவியாக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமான நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் இருந்தது.இந்த நிலையில்   சீசன் 3 வரும் ஜூன் 23ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. சீசன் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து, சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. 


 

 

மூன்றாவது சீசனையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.  இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் பிரபல வானொலி ஒன்றில் RJ வாக வேலை பார்த்து வந்த வைஷ்ணவி பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். விமானி ஒருவரை நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்தது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.