Skip to main content

கரும்பு நிலுவை தொகையை கேட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

வேலூர் மாவட்டத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் இருந்து கரும்பு விவசாயிகள் கரும்பை பயிரிட்டு, பின்பு சாகுபடி செய்து இங்கே அனுப்புகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதால் சரியாக கரும்புக்கு தரவேண்டிய தொகையை தந்துவிடும் என நினைத்தனர். அப்படி நினைத்தது எவ்வளவு வீண் என்பதை பின்பு தான் விவசாயிகள் புரிந்துக்கொண்டனர்.
 

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு அனுப்பின விவசாயிகள். அதனை பெற்றுக்கொண்ட ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகையை மட்டும் நாளை தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன் என்று கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருகிறது. விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவை தொகை மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்கிறார்கள் விவசாயிகள். 

 Sugarcane balance   Struggling before the cooperative sugar plant!


எங்களுடைய நிலுவை தொகையை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் வலியுறுத்தினோம். ஆனால் நிலுவை தொகை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. அதனால் தான் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி அக்டோபர் 10ந்தேதி காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள் விவசாயிகள். 
 

விரைவில் நிலுவை தொகையை வழங்கி விடுகிறோம், போராட்டத்தை கைவிடுங்கள் என அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 




 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NN

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 'தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசும்' என்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

தொடரும் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Continued rain; Warning to fishermen

தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், தேனாம்பேட்டை, அயனாவரத்தில் தலா 6  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆவடியில் 6 சென்டிமீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 5.2 சென்டிமீட்டர் மழையும், திருத்தணி 5 சென்டிமீட்டர் மழையும், சோழவரம் 4.2 சென்டிமீட்டர் மழையும், செங்குன்றம் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.