Skip to main content

காவேரி மருத்துவமனையிலிருந்து ஸ்டாலின் புறப்பட்டார்!

Published on 29/07/2018 | Edited on 29/07/2018

 

stalin

 

கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டிருந்தது. இந்த மருத்துவ அறிக்கைக்கு பிறகு ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். 

 

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். பல அரசியல் தலைவர்கள் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளன மேலும் தொடர்ந்து மருத்துவ குழு சிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டிருந்தது.

 

அதன் பிறகு செய்தியாளர்களை  சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறுகையில், கலைஞர் உடல்நிலையில் தற்காலிகமாக சிறு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் அந்த பின்னடைவு சீர் செய்யப்பட்டுள்ளது. எனவே வந்ததிகளை நம்பவேண்டாம். தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறினார்.  

 

இந்த அறிவிப்புக்கு பிறகு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு புறப்பட்டார். மேலும் ஆ.ராசா, ராஜாத்தியம்மாள் ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்