Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
sri

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஸ்ரீஆண்டாள்) கோவிலில், வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத் திருவிழாவை, இன்று காலை கொடியேற்றத்துடன் (துவஜா ரோஹணம்) துவக்கி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள் – ரெங்கமன்னாரை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், தினமும் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மாலையில் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 30-ஆம் தேதி காலை 7-05 மணிக்கு செப்புத் தேரோட்டமும் (கோரதம்),   அன்று இரவு 6-25 மணி முதல் 7-25 மணிக்குள் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெறவிருக்கிறது.  
 

சார்ந்த செய்திகள்