Skip to main content

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது - படகுகள் பறிமுதல்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

jkl

 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காலங்காலமாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். சில வருடங்களாகக் கைது நடவடிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பும் 10க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மீனவர்களைக் கைது செய்தனர்.

 

இந்நிலையில் இன்று இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்