Skip to main content

விசைத்தறி கூடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

 

Sexual abuse

 

 

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். தறித் தொழிலாளி.  


விசைத்தறி கூடத்தில் இவருடன் வந்த 15 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார் அச்சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அச்சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்கள் இவர்களது புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தறி தொழிலாளி மணிகண்டனை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் சித்ரவதைக்குள்ளாகி வருகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கிசுகிசுக்குகிறார்கள்.

சார்ந்த செய்திகள்