Skip to main content

வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் சென்னையில் அறிமுகம்..! (படங்கள்)

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

 

வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கோவையை தலைமையிடமாக கொண்ட வொர்த் கண்ட்ரோல்ஸ் பிரைவேட் லிட்.. நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது, வொர்த் கண்ட்ரோல்ஸ் பிரைவேட் லிட்... நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக சீட்ஸ் டூ ஆயில் என்ற பெயரில் வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அதனை இந்தியா மற்றும் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வினியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த இயந்திரத்தைப் பயண்படுத்தி வீட்டிலேயே கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வித்துக்களில் இருந்தும் எண்ணெய் தயாரித்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்டனர். 

சார்ந்த செய்திகள்