Skip to main content

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

School Education Warns Teachers!

 

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை  திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்