Skip to main content

காடுவெட்டி குரு மரணத்திற்கு காரணம் பாமக ராமதாஸ்! வீரபாண்டி ராஜா பதிலடி!!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்த பலரின் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாசும், அவருடைய மகன் அன்புமணி ஆகியோர்தான் காரணம் என்று, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்னியர் சமூகத்தினருக்கு எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அண்மையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் ஆதாயத்திற்காக திமுக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டதாக பாமக பகிரங்கமாக குற்றம் சாட்டியது. பின்னர் திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் வன்னியர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது யார்? என்பது குறித்து பரஸ்பரம் அறிக்கைப்போர் நடத்தி வருகின்றன.  இதற்கிடையே, சேலத்தைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

salem pmk party arul and dmk raja kaduvetti guru incident


மேலும் அவர், ''கலைஞர் உயிருடன் இருக்கும்போது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்று பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட கட்சியின் முன்னோடிகள் சிலர் முன்மொழிந்தனர். அப்போதே அதற்கு வீரபாண்டி ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை மனதில் வைத்துக்கொண்டுதான், சேலம் அருகே சில ஆண்டுக்கு முன் நடந்த ஆறு பேர் கொலை வழக்கில் தேவையில்லாமல், வீரபாண்டியாரின் சகோதரர் மகன் சுரேஷ்குமார் மீது வேண்டுமென்றே காவல்துறை மூலம் வழக்குப்பதிய வைத்தார் மு.க.ஸ்டாலின்.


இதனால் அவர் மனம் உடைந்து போனதால் உடல்நலம் குன்றியது. அதன்பிறகே அவர் மருத்துவமனயையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வீரபாண்டி ஆறுமுகம் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்போம்,'' என்று கூறியிருந்தார்.  அருளின் பேட்டி, ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

salem pmk party arul and dmk raja kaduvetti guru incident



 

அவர் கூறியதாவது:  


''எந்த தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணம் குறித்து பாமக அருள் தெரிவித்த கருத்துகளை ஏற்க முடியாது. என் தந்தை இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வரவில்லை. இப்போது தேவையின்றி அவருடைய மரணத்தை வைத்து பாமகவினர் ஆதாயம் தேட பார்க்கின்றனர். அவருடைய மரணத்தைப் பற்றி பேச பாமகவுக்கு அருகதை கிடையாது. வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுகதான். திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதை பாமக வரவேற்க வேண்டுமே தவிர, தனது கட்சிக்காரர்களை வைத்து பேட்டி கொடுத்து வருகிறார்.
 


தற்போது அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது. அக்கட்சியிடம் இதுநாள் வரை ஏன் உள்ஒதுக்கீடு கேட்கவில்லை? காடுவெட்டி குரு மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்தவர்களின் இறப்புக்கு ராமதாசும், அன்புமணியும்தான் காரணம். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். எனக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி வருகின்றனர். பாமக அருள் மீது வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைமையிடம் பேசி முடிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டும், அதிமுகவில் சீட் பெற வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு பேசி வருகின்றனர்,'' என்றார் வீரபாண்டி ராஜா.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.