Skip to main content

எலும்புக்கூடு வழக்கில் துப்பு துலங்கியது! - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

Published on 19/04/2021 | Edited on 20/04/2021

 

salem district women incident police arrested person

 

சேலம் அருகே, எலும்புக்கூடாக கைப்பற்றப்பட்டது ஒரு பெண் என்பதும், திருமணம் மீறிய உறவால் அவர் கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழிப்பறி குற்றவாளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள டால்மியாபுரம் பர்ன் அன் கோ நிறுவனத்தின் பின்பகுதியில் கடந்த 11- ஆம் தேதி ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. எலும்புக்கூட்டை கைப்பற்றி கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர். 

 

உடற்கூராய்வில் அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்பதும், உத்தேச வயதும், இயற்கைக்கு மாறாக மரணம் சம்பவத்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கருப்பூர், ஓமலூர், சேலம் சுற்றுவட்டாரத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை காவல்துறையினர் தண்டோரா போட்டு விசாரித்து வந்தனர்.

 

காவல்துறை விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர், சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 30) என்பது தெரிய வந்தது. இவருக்கும், வெள்ளைக்கல் பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து பிரபாகரனைப் பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

 

கடந்த மார்ச் 3- ஆம் தேதி, ராஜேஸ்வரியை டால்மியாபுரத்திற்கு அழைத்துச்சென்ற பிரபாகரன், அங்கு அவருடன் 'நெருக்கமாக' இருந்துள்ளார். அப்போது ராஜேஸ்வரி பணம் கேட்டுள்ளார். பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

அப்போது ஆத்திரம் அடைந்த பிரபாகரன், ராஜேஸ்வரியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

ஏற்கனவே ஒரு வழிப்பறி வழக்கில் சிறை சென்றிருந்த பிரபாகரன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிணையில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். அதன்பிறகு ராஜேஸ்வரியை கொலை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.