Skip to main content

'புரெவி' புயல் மழையின் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

'Purevi' storm rains kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மழையின் காரணமாக, கடந்த சில நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த அவர், நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள அவர்களது வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மின்சார மோட்டாரில் தண்ணீர் வருகிறதா என்று பார்ப்பதற்காக அதன் சுவிட்சைப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அடுத்து கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ளது புல்லூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயது வெங்கடேசன். இவர் விவசாயக் கூலி வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை, விவசாயக் கூலி வேலைக்குச் செல்வதற்காக அவ்வூர் ஏரிக்கரை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சேறும் சகதியுமாக இருந்ததால், நடந்து செல்லும்போது கால் வழுக்கி, ஏரி, மதகுப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். வெங்கடேசனுக்கு தமிழச்சி என்ற மனைவியும், பதினோரு வயதில் புஷ்பா என்ற மகளும், ஒன்பது வயதில் மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து வெங்கடேசன் மனைவி தனலட்சுமி வேப்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது மதகளிர் மாணிக்கம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில் வேல்முருகன். இவரது மனைவி, விஜயலட்சுமி இவர்களுக்கு ஆதித்தியன் என்கிற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு, செந்தில் வேல்முருகன் பிழைப்புக்காக வெளிநாடு சென்று, வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று விஜயலட்சுமி வீட்டில் இருந்தபோது, மழையின் காரணமாக ஊறிப்போய் இருந்த அவர்களது வீட்டின் சுவர் விஜயலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.