Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Public protest in front of the District Collector's Office entrance!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13/12/2021) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். மொடக்குறிச்சி அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

 

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, "எங்கள் கனகபுரம் கிராமத்தில் கனகபுரம், ஜீவா நகர், காங்கயம்பாளையம், கொண்டவநாய்க்கன்பாளையம், சேடர்பாளையம், சிஎஸ்ஐகாலனி, குல்பட் என அப்பகுதியில் 1500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களில் பெரும்பாலும் விவசாய கூலிவேலை செய்து வருபவர்கள் தான். எங்களுக்கு பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா, மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டி கனகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம்  விண்ணப்பிக்கும்போது அவர் சான்றிதழ் வாங்காமல் நாட் கணக்கில் எங்களை அலைக்கழிக்கிறார். 

 

மேலும் சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 500 முதல் 5000 வரை லஞ்சம் கேட்கிறார். இதில் வசதி படைத்த சிலர் பணம் கொடுத்து சான்றிதழ் பெற்று விடுகின்றனர். ஆனால் தினக் கூலியான எங்களைப் போன்ற மக்கள் பணம் கொடுத்து வாங்க முடியவில்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் சிலர் முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த போது பெரும்பாலான மனுக்கள் தகுதி இல்லை என்று அவரே நிராகரித்து விடுகிறார். அவருக்கு உடந்தையாக அவரது உதவியாளரும் செயல்பட்டு வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்து  பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் விரைவாக  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.

 

முன்னதாக கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இங்கே கோஷம் போட கூடாது என்றும்  உங்களில் முக்கியமான ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுங்கள் என்றனர். 

 

அதனை ஏற்று சிலர்மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். அதிகாரியின் ஊழலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால்  கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.