Skip to main content

பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை.

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

கல்வி கற்க  வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்புகளில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச சேர்க்கைக்காக தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 

 

private school reservation in tamilnadu

 

 

அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி விடும் என்று அரசு அறிவித்து தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கு கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாததாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சர்வர் உள்ளிட்ட சிறு சிறு குளறுபடிகளாலும், தேர்தல் சமயம் என்பதாலும் விண்ணப்பிக்க முடியாமல் விட்டுவிட்டனர்.

உதாரனமாக கடலூர் மாவட்டத்தில் 368 நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 5,431 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் மொத்தம் 5,087 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதிலும், பல்வேறு காரணங்களால் 330 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இதனால், 5,431 இடங்களுக்கு 4,757 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர். அதிலும், சில பிரபல தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே அதிக போட்டி நிலவுகிறது. 

மேலும் இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு மொத்தமுள்ள 5431 இடங்களுக்கு 4757 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மொத்த இடங்களையும் நிரப்ப மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று தமிழக அளவிலும் இந்த பிரச்சணை உள்ளது கூறப்படுகிறது.  

இதில் நன்கு கல்வி அறிவு பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பணியாற்றி வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி சான்றிதழை தவறான முறையில் பெற்று கல்வி உரிமை சட்டத்தில் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று கடந்த காலங்களில் விண்ணப்பித்து ஏழை மாணவர்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தை தட்டிபறித்து அனைத்து வசதிகளும் உள்ளவர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கிராம புறம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நிலை, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிராம புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கு எப்படி விண்ணபிப்பது என்று விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிடுவதாலும் இது போன்று நடக்கிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.