Skip to main content

அபராதம் விதித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


அதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி, 'தனியார் வங்கிகள் மற்றும் நுண் கடன் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான தவணை தொகைகளை ஊரடங்கு காலமான 3 மாதம் மற்றும் அதற்கடுத்த 3 மாதங்களுக்கு தவணைத்தொகை கேட்டு நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால் பெரும்பாலான தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தவணைத்தொகைகளையும், கடந்த 2 மாதங்களுக்கான தவணைத்தொகையுடன் அபராத வட்டியும் கேட்டு நிர்ப்பந்தப்படுத்துகின்றன. 

அதேபோல் செல்போன், இருசக்கர வாகனம் போன்றவைகளுக்கு 2 மாதங்களாக தவணை வசூலிக்காத நிறுவனங்கள் தற்போது ஜுன் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் தவணைக்கான காசோலைகளை வாடிக்கையாளருக்கு அறிவிப்பு செய்யாமலேயே வங்கியில் போட்டு செக் பவுன்ஸ் தொகையை வசூலிக்கின்றன. அதிலும் சில நிறுவனங்கள் ஒரே செக்கை ஒரே நாளில் அடுத்தடுத்த நாள்களில் மீண்டும் மீண்டும் செக்கை போட்டு செக் பவுன்ஸ் தொகை என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது கணக்கில் இருக்கும் சிறு தொகையையும் எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

 

 


இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களை தங்களது கடன் தொகையை செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாகவும், வங்கியில் பணம் இல்லாத சூழ்நிலையிலும் ECS செக்கை பயன்படுத்தி check pounce என்ற முறை குறைந்தபட்சம் 590 ரூபாய் என்கிற பெயரில் 5 முதல் 15 தடவைகள் பண பிடிக்கப்பட்டு உள்ளதால் அது தாங்கள் கட்டவேண்டிய 2000 ரூபாய் தொகையை விட அதிகளவு பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுப் போட்டு பயனாளிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கு வந்த பெரியகடை காவல் துறையினர் பைனான்ஸ் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.