Skip to main content

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனார் கொலை; ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய மருமகள்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

poisoning radish sambar; A year later, the daughter-in-law was arrested

 

முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் ஆகிய மூன்று பேரை மருமகள் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு ஆண் நண்பருடன் மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள இளங்கியனுர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்களது மகன் வேல்முருகனுக்கு கீதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன  நிலையில் இரண்டு மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி கொளஞ்சியம்மாள் வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதனை மாமனார் சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணன் கிருஷ்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்ற சிறுவன் என 4 பேரும்  சாப்பிட்டுள்ளனர்.

 

அப்பொழுது திடீரென கொளஞ்சியம்மாளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. தொடர்ந்து அவரது கணவர் சுப்பிரமணியனுக்கும் சிறுவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் இதில் கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு சிறுவன் நித்தீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.

 

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையில் வேல்முருகனின் மனைவி கீதாவிற்கு விருத்தாசலம் புதுக்குப்பத்தைச் சேர்ந்த 43 வயதான ஹரிகரன் என்பவருடன் முறையற்ற தொடர்பிருந்தது தெரியவந்தது. இதனை வெளிநாட்டிலிருந்த மகன் வேல்முருகனிடம் தாய் கொளஞ்சியம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த மருமகள் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது கீதாவையும் அவருடன் முறையற்ற தொடர்பிலிருந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.