Skip to main content

போன் செய்தால் வீட்டுக்கே வரும் அரசு மருத்துவர்கள்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டுவட காயம், கழுத்து எலும்பு முறிவு போன்ற காயங்கள் காரணமாக கை கால்கள் முற்றிலும் செயலிழந்தவர்கள் நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பதால், படுக்கை புண் ஏற்பட்டு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளனர். மேலும், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கடுமையான நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதே போன்று செயலற்ற நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற இயலாத நிலையில் உள்ளனர். அவசர நிலையின் போதும், உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையிலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும் போது நோயாளிகளும், அவர்களை அழைத்து வரும் உறவினர்கள், நண்பர்கள் அதிக சிரமப்படுகின்றனர்.

patient once call govt doctors arrive home free service start tiruvannamalai


இதனை கருத்தில் கொண்டு உடல் பாதிப்புகளால் மருத்துவமனைக்கு செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்காக 24 நேரமும் செயல்படும் வகையில் 8925- 123- 450 என்ற கைபேசி எண் மூலமாக மருத்துவ அழைப்பு (medi call) என்ற எண் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இதற்கான விழா, திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மருத்துவமனை செல்ல இயலாதவர்கள், மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பார்கள். இது கட்டணமில்லா சேவை.

patient once call govt doctors arrive home free service start tiruvannamalai


இந்த சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, நவம்பர் 1ந்தேதி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த அமைப்பின் கீழ் உள்ள 18 வட்டார மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்து உதவி கோரும் போது தொடர்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்தடுப்பு சிகிச்சை பணியாளர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்கே சென்று தேவைப்படும் மருத்துவ உதவிகள் அளிப்பார்கள்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்கவாத நோயால் கை, கால்கள் செயல் இழந்தவர்கள் 487 பேரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 118 பேரும், தண்டுவட காயம்பட்டவர்கள் 62 பேரும், மனநலம் குன்றியவர்கள் 15 பேர், நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருப்பதால் படுக்கை புண் வந்த 65 பேர், வயது முதிர்வால் நடமாட இயலாதவர்கள் 191 பேர் மற்றும் வேறு சில நோய்கள் தாக்கியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கவுள்ளார்கள்.


வீட்டிலேயே முடங்கியுள்ள நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைப்படும் போது 8925 - 123450 என்ற மருத்துவ அழைப்பு (medi call) எண்ணை தொடர்பு கொள்ளலாம், மற்ற ஆரம்ப சுகாதார மையங்களும் இதில் இணைத்தால் சிறப்பானதாக இருக்கும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.