Skip to main content

“புள்ளைங்கள பாத்ரூம கழுவ சொல்றாங்க”; அத்துமீறிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Parents of students accuse government school principal

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது உடையார்பாளையம் கிராமம். இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் கலையரசி. இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தலைமையாசிரியாக இருக்கும் கலையரசி இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவது, மீறினால் அடிப்பது மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், தலைமையாசிரியர் கலையரசி மீது ஏற்கனவே புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறைக்கு வந்த தலைமையாசிரியர் கலையரசி மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். அப்போது,   குழந்தைகள் யாரும் தண்ணீர் குடிக்க கூடாது, கழிவறைக்கு செல்ல கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் சில பெண் குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும், சில தண்ணீர் குடிக்காத சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் இச்சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திடீரென பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அவர்கள் தலைமையாசிரியர் கலையரசியால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளிடம் நடந்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்தனர். அதில், தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உண்மை என நிரூபணம் ஆனதால், அவரை பணியிட மாற்றம் செய்ய மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் தலைமை ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்த தலைமையாசிரியர் கலையரசியின் கொடுமையான செயலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 குழந்தைகள் படித்து வந்த இந்த பள்ளியில் தற்போது 60 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே இவர் பணியாற்றிய இரண்டு பள்ளிகளிலும் இதே போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், தலைமை ஆசிரியை கலையரசியை பணி நீக்கம் செய்யும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

அதே சமயம், தலைமையாசிரியைக்கு எதிராக திடீரென பள்ளிக்குள் திரண்ட பெற்றோர்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.