Published on 09/03/2023 | Edited on 09/03/2023
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று (09.03.2023) தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்விக்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், சட்ட சமூக பலன்களை பெற்றிட உறுதி செய்திடவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.