Skip to main content

அதிகாரிகளின் சோம்பேறித் தனத்துக்கு மரங்கள் பலி – கொதிக்கும் பசுமை ஆர்வலர்கள்

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

திருவண்ணாமலை நகரத்தில் திருவண்ணாமலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட மின்வாரிய அலுவலகம் உள்ளது. எதிரே நகர மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு பகுதியும் 15 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பரந்துவிரிந்துள்ளது.

 

 Officers lazy trees are dead - boiling green activists

 

இதில் 100, 150 ஆண்டுகளை கடந்த மரங்கள் உட்பட நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இதில் பழைமையான மகிழமரம் உட்பட பல மரங்களை திடீரென உயர் அதிகாரி ஒருவர் வெட்ட உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன.

 

 

இதுப்பற்றி அவ்வலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் நம்மிடம், இந்த மரங்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. இங்கு பணியாற்றும் எங்களுக்கும், இங்கு வேலையாக வரும் மக்களுக்கும் நல்ல குளிச்சியை தந்துவந்தது. இங்கு கட்டிடங்கள் கட்டி விஸ்தரிக்க வேண்டும் எனச்சொல்லி மரங்களை வெட்ட உத்தரவிட்டுவிட்டார் அந்த உயரதிகாரி. அவர் அதிகாரியாக செயல்படாமல் தான்தோன்றிதனமாக செயல்படுகிறார், அவரை சுற்றி சிலர் உள்ளனர், அவர்கள் சொல்வதை மட்டும்மே செய்வார். தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாராவது அவரிடம் முறையிட்டாலும் கேட்பதில்லை. மரங்களை வெட்டாமல் கட்டிடங்கள் கட்ட நிறைய இடங்கள் வளாகத்திலேயே உள்ளன. இவர்களின் சோம்பேறி தனத்துக்கு மரங்களை பலிக்கொடுத்துவிட்டார்கள் என்றார் வேதனையான குரலில்.

 

 Officers lazy trees are dead - boiling green activists

 

நகரத்தில் ஏற்கனவே மரங்கள் வளர்ப்பது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இருக்கும் மரங்களையும் மின்கம்பியில் உராய்கிறது என வெட்டுவதும், வெட்டச்சொல்லி மக்களை மிரட்டுகின்றனர் மின்வாரியத்தினர். இந்நிலையில் தங்கள் வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது நியாயமற்ற செயல் என கொதிக்கின்றனர் பசுமை ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்! 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
DMK councillor are protesting against officials in Gudiyatham section

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கி ஒரு தலைபட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

மன்ற கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் ஆளும்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து வெளியே வந்தனர். சில கவுன்சிலர்கள் ஆல்ரெடி பாய், தலைகானியோடு வந்திருந்தனர். அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வராண்டாவில் கறுப்பு பேட்ச் அணிந்துக்கொண்டு தரையில் பாய் போட்டு அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் நடத்திய பேச்சுவார்த்தையில், மற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செயல்படுவது போல் அனைவரையும் சமமாக கருத வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தின் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒதுக்குவது போல் கவுன்சிலர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றனர். குடியாத்தம் நகர போலீசாரும் சமாதானம் பேசினர். இதனால் சமரசம் ஏற்பட்டு ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாநிலத்தின் ஆளும்கட்சி திமுக, தொகுதி எம்.எல்.ஏ திமுக, ஒன்றியக்குழு தலைவர் திமுகவாக இருந்தாலும் இந்த ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை அதிமுக பிரமுகர்களே நடத்துகிறார்கள், இதற்கு சில திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுக பிரமுகர்கள் ஊராட்சி மனற் தலைவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அதிமுக பிரமுகர்கள் தங்களது தேவைகளான ஒப்பந்தம், பணிகள் போன்றவற்றை சாதித்துக்கொள்கிறார்கள். இது அடிக்கடி உள்ளுக்குள் நடந்த மோதல் இந்த பிரச்சனை குறித்து தெரிந்தும் வேலூர் மாவட்ட முக்கிய புள்ளிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கவுன்சிலர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துவிட்டார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த போராட்டத்தால் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.