Skip to main content

வேட்டை நாய்கள் கடித்து கர்ப்பிணி மான்கள் பலி!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

நெல்லை மாவட்டத்தின் கங்கை கொண்டான் அருகே மான்களின் பாதுகாக்கப்பட்ட வனச்சரணாலயம் உள்ளது. அங்கு அரியவகை மான்களும் உள்ளன. மாவட்டத்தை அடுத்த ஆலங்குளம் அருகிலுள்ள ராமர் கோவில் மலை மற்றும் சுப்பையாபுரம் மலைப்பகுதிகளில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. தற்போது மலைப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இரைக்காகவும், தண்ணீருக்காகவும் மான்களின் கூட்டம் சமவெளி வயல் பகுதிகளுக்கு வருவதுண்டு. இதனால் அவைகளுக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வனத்துறையினரிடம் வைக்கப்பட்டிருக்கிறது.

nellai district Hunting dogs bite pregnant deer

இதனிடையே வழக்கம் போல் தண்ணீருக்காக 7 மான்கள் அப்பகுதிக்கு வந்திருக்கின்றன. காற்றாலைகளைக் கொண்ட அப்பகுதியில் காவலுக்காகவும் வேட்டைக்காகவும், வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லப்பட்டது. சமவெளி வயல் பகுதிகளுக்கு வந்த 7 மான்களையும், அந்தப் பகுதியின் சுமார் 40- க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் சுற்றி வளைத்து கடித்துக்குதறியுள்ளன. சத்தம் கேட்டு அருகிலுள்ள மக்கள் ஒடி வந்து நாய்களை விரட்ட அதற்குள்ளாக 4 மான்கள் இடத்திலேயே சம்பவ மரணமடைந்ததுள்ளன. மீதமுள்ள மான்களையும் வீராணம் வரை விரட்டிச் சென்றுள்ளது.

nellai district Hunting dogs bite pregnant deer

சம்பவ இடத்திற்கு வந்த கோவில் பாண்டி, தசரதராமன் உள்ளிட்ட வனக்காப்பாளர்கள், பலியான மான்களை மீட்டனர். கால் நடை மருத்துவர்களான ராம் செல்வம், சந்திரன், இறந்த மான்களை உடற்கூறு ஆய்வு செய்த போது, அதில் இறந்த 4 மான்களில் மூன்று மான்கள் கர்ப்பிணி என தெரிய வர பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு அவைகள் அங்கேயே புதைக்கப்பட்டன. மான்கள் மனித இனத்தைப் போன்று பாதுகாக்கப்பட வேண்டியவைகள். அவைகளுக்குரிய அத்தியாவசியப் பணிகள் செய்து தரப்பட்டிருக்கப்படுமேயானால் இது போன்றதொரு கொடுமை நடந்திருக்குமா என ஆதங்கப்பட்டனர் வீராணம் வாசிகள். மனித உயிர் தான் என்பது குறியல்ல. எந்த ஒரு உயிரினத்திற்கும் பாதுகாப்பு அவசியம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Next Story

அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு; திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Pushing in Minister's Advisory Meeting; DMK officials argue

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா கூட்டணி சார்பில் அக்கூட்டணியில் உள்ள திமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில் திசையன்விளை நகரப் பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசனுக்கும், நகரச் செயலாளர் ஜான் கென்னடிக்கும் இடையே மேற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி பூசலாக மாறியது.

இதில் இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தங்களுக்கு கூட்டணியில் மரியாதை இல்லை எனக் கூறி  ஆதரவுகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது.