Skip to main content

ஈரோட்டிலிருந்து கேரளாவுக்கு பயணமானார்... இந்தியாவின் இரண்டாவது அதிகார மைய தலைவர்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ஈரோட்டுக்கு கடந்த 6 ந் தேதி காலை வந்த அந்த.விஐபியால் ஈரோடு நகர் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தான்.சரியாக முற்பகல் 11.30 க்கு இன்டர்சிட்டி ரயில் மூலம் ஈரோடு ரயில்நிலையம் வந்தார் அந்த வி.ஐ.பி. அடுத்த 15 நிமிடங்கள் ஈரோட்டில் உள்ள அனைத்து இணைப்பு சாலை சிக்னல்களும் அணைக்கப்பட்டது. 

 

erode

 

இருசக்கர வாகனங்கள் கூட தடுத்து நிறுத்தப்பட்டது. கருப்பு பூணை இசட் பிரிவு பாதுகாப்பு படையினர் சூழ மிகுந்த பாதுகாப்பு வளையத்தில் அந்த வி.ஐ.பி. அழைத்துச் செல்லப்பட்டார். வந்தவர், சென்றவர், எங்கே போகிறார் அவர் என்று ஒருசில போலீல் அதிகாரிகளை தவிர்த்து யாருக்குமே தெரியாது. அந்த முக்கிய நபர் பொதுமக்கள் யாருக்கும் சுத்தமாக தெரியவில்லை. 

ஆனால் அவர் தான் இந்திய அரசியல் அதிகார மையத்தின் இரண்டாவது தலைவர் . 

 

 

முதல் தலைவர் அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதியாவார். அவர் டெல்லியில் இருப்பார். ஆனால் எந்த சட்டத்திலும் இல்லாத இந்த விஐபி தற்போதுள்ள ஜனாதிபதிக்கே தலைவராவார். இவர் நாக்பூரில் இருக்கிறார்.  

 

erode

 

ஆம் இந்தியாவின் இரண்டாவது அதிகார மையமான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இவர்தான் ஈரோடு வந்தார். ஈரோட்டில் நடைபெறும் ஆர் எஸ் எஸ் பயிற்சி  முகாமில் கலந்துகொள்வதற்காகவே மோகன் பகவத் ஈரோடு வந்திருந்தார். 

 

சென்ற ஆறாம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஈரோடு  யு. ஆர் சி பள்ளியில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விட்டு 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டிலிருந்து கிளம்பி கேரளா மாநிலம் புறப்பட்டுச் சென்றார் மோகன் பகவத். 

 

ஈரோட்டில் தங்கிய நான்கு நாட்களும் ஆயிரக்கணக்கான போலீசார் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நடந்த பள்ளி மற்றும் ஈரோடு முழுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.