Skip to main content

"நீங்களும் ஒரு பெண்ணுக்குதானே பிறந்தீர்கள்..." - நயன்தாரா அறிக்கை 

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ராதாரவி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. பலர் நயன்தாரா குறித்து அவர் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக சின்மயி, விக்னேஷ் சிவன், விஷால் மற்றும் நடிகர் சங்கம் கண்டனங்கள் தெரிவித்தன. இதனை அடுத்து ராதாரவியை திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். 
 

nayanthara

 

 

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 
 

தன் அறிக்கையின் தொடக்கத்திலேயே ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ள நயன்தாரா, ராதாரவி குறித்து, "இது போன்று பெண்களை இழிவாகப் பேசும் அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்வது, நீங்களும் ஒரு பெண்ணின் வழியாகத் தான் இந்த உலகிற்கு வந்துள்ளீர்கள். உங்களைப் போன்று பெண்களை இழிவாகப்பேசி ஆண்மையை நிலைநிறுத்துபவர்களின் குடும்பங்களில் இருக்கும் பெண்களின் துயரை நான் உணர்கிறேன். மூத்த நடிகராக இருந்து பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்போது இதுபோன்ற பேச்சுகளால் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். எனக்கு வேதனையளிப்பது என்னவெனில், இதுபோன்றவர்களின் இது போன்ற பேச்சுகளுக்கு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ந்து ஊக்குவிப்பதே. இவர்களை ஊக்குவிப்பதை நாம் அனைவரும் நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 

மேலும், நடிகர் சங்கத்திடம் ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார். 'உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி பெண்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க குழு அமைப்பீர்களா? விசாகா வழிமுறைகளின்படி இந்த விஷயத்தை விசாரிப்பீர்களா?' என்ற கேட்டுள்ள நயன்தாரா, தான் தொடர்ந்து சீதாவிலிருந்து பேய் வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.