Skip to main content

திருச்சியில் ஆயுதபூஜை கொண்டாடிய கொள்ளையன் முருகன் !

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் துளை போட்டு 13 கோடி தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடித்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனான். சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் இன்று முருகன் திருச்சியில் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

 

Murugan, the robber who celebrated the armed pooja in Trichy

 

திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவரம்பூரை அடுத்த வேங்கூர் செல்லும் வழியில் நருங்குழி நகர் பகுதியில் முருகன் மற்றும் அவர் மனைவி மஞ்சுளா மூன்று வயது மகன் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் சுகன்யா ஆகியோருடன் கடந்த ஒரு மாதம் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

 

Murugan, the robber who celebrated the armed pooja in Trichy

 

இரண்டு கார்களுடன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் வேலை செய்து திருச்சி திரும்பிய ஷேக் அப்துல் கபூர் என்பவருக்கு சொந்தமான வீட்டை முருகன் வாடகைக்கு எடுத்திருக்கிறான்.

60 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 6,000 ரூபாய் வாடகைக்கு பேசி தங்கி இருந்ததும், கடந்த 27ம்தேதி குடும்பத்தினரை அழைத்து வெளியூர் சென்று விட்டு திரும்பவும் கடந்த ஒன்றாம் தேதி அன்று வீடு திரும்பியவன். கடந்த வாரம்வீட்டில் சிறப்பாக ஆயுதபூஜை கொண்டாடி விட்டு அங்கிருந்து அதன்பிறகு கார் மூலமாக வெளியே சென்றவன் திரும்பவும் இந்த வீட்டிற்கு வரவே இல்லை. தகவல் தெரிந்து தனிப்படை போலிசார் அங்கே சென்றபோது அந்த வீட்டில் பெரிய நாய் ஒன்று மட்டும் பாதுகாப்புக்காக இருக்கிறது.

 

Murugan, the robber who celebrated the armed pooja in Trichy

 

முருகனுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த சேஷக் அப்துல் கபூர் என்பவரை மட்டும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். திருச்சியில் ஒரு மாதம் குடும்பத்தோடு தங்கி நகைக்கொள்ளையை திட்டமிட்டு நடத்தியதும். அதே வீட்டில் ஆயுதபூஜை கொண்டாடியதும். போலிசருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

p

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.