Published on 22/06/2021 | Edited on 22/06/2021
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர். எனவே பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் தென்னக ரயில்வே பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரத்து செய்திருந்தது. குறிப்பாக மலைக்கோட்டை விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றுமுதல் (21.06.2021) மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்தது. நேற்று இரவு திருச்சியில் இருந்து 10.30 மணிக்கு புறப்பட்ட மலைக்கோட்டை ரயில் சென்னை சென்றடைந்தது.