Skip to main content

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராவது அந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் -  நாராயணசாமி

Published on 26/08/2018 | Edited on 26/08/2018

   

na

 

புதுச்சேரி  முதல்வர் நாரயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,  ’’கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் எந்தவித தடையும் கூறாமல் கேரள மக்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். 
வாஜ்பாய் அஸ்தியை வைத்து பாஜகவினர்  அரசியல் செய்யப்பார்க்கிறார்கள் என்று அவரது உறவினர்களே கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.  இது துரதிர்ஷ்டவசமானது.  

 

தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்த்தவர் வாஜ்பாய்.  அதனால் தானோ, என்னவோ பிரதமர் பதவிக்குப்பிறகு அவருக்கு எந்த பதவியையும் பாஜக வழங்கவில்லை.  இருப்பினும் அவரது பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியவில்லை. 

 

கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு நடத்தப்படுவதால் அவர்களது வயது வரம்பை 22 ல் இருந்து 24 ஆக உயர்த்தி எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் காவலர் தேர்வை நடத்த முடிவு செய்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 392 ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தபட்டுள்ளது" என்றார். 

 

மேலும், மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை வலுப்பெற செய்யும் என்றும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும்  தெரிவித்த நாராயணசாமியிடம், கலைஞர் அஞ்சலி நிகழ்வுக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா வருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, " எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் நேசிக்கக்கூடிய தலைவர் கலைஞர்.  அவரது நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமீத்ஷா வருவது எவ்வித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என்றார்.

 

சார்ந்த செய்திகள்