Skip to main content

சூளைக்கு மண் எடுக்கும் தகராறில் முதியவர் கொலையா? - போலீசார் விசாரணை

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 An old man was killed in a dispute over taking soil for the kiln; Police investigation

 

மயிலாடுதுறையில் மண் எடுக்கும் பிரச்சனையில் நிலத்தின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயத் தொழில் செய்து வரும் இவருக்கு வீட்டின் பின்புறம் நிலம் ஒன்றும் உள்ளது. இந்த நிலத்திலிருந்து செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர் என்பவரிடம் சுமார் 40,000 ரூபாய்க்கு விலை பேசி உள்ளார். இதற்கான முழுத்தொகை கொடுக்கப்படாததாகக் கூறப்படும் நிலையில் சில நாட்களாக அந்த பகுதியில் மண் எடுக்கப்பட்டு வந்தது.

 

 An old man was killed in a dispute over taking soil for the kiln; Police investigation

 

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மண் எடுக்கும் பகுதிக்குச் சென்ற ராஜேந்திரன் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த பொழுது விவசாயி ராஜேந்திரன் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மண் எடுக்க வந்தவர்களிடம் முழு தொகையை கேட்டு ராஜேந்திரன் வாக்குவாதம் செய்ததாகவும் முழு பணத்தை கொடுத்தால்தான் மண் எடுக்க வேண்டும் என மண் எடுக்க வந்த டிராக்டரின் சாவியை பிடுங்கச் சென்றதாகவும் அப்போது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

 

ஆனால், பாஸ்கரனின் ஆட்கள் மண்வெட்டி உள்ளிட்டவற்றால் ராஜேந்திரன் தலையில் தாக்கியுள்ளனர் என்றும், இதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்த அவர் உயிரிழந்தார் என ராஜேந்திரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையேல் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் உரிமையாளர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன், டிராக்டர் ஓட்டுநர் பாலு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.