Skip to main content

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் , தங்கம் !

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . இதனால் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார் .இந்நிலையில் நேற்று வரை (07/04/2019) தமிழகத்தில் சுமார் 160.39 கோடி ரூபாய் பணமும் , சுமார் 228.85 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் , வெள்ளி  உள்ளிட்ட பொருட்களுடன்  மொத்தம் சுமார் 398.11 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் . 

 

election commission



மேலும் குஜராத் மாநிலத்தில் மட்டும்  மொத்தம் சுமார் 513.2 கோடி மதிப்பிலான பணம் ,தங்கம் ,உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படையினர் .இது இந்தியாவிலேயே குஜராத்தில் தான் அதிக மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மக்களவைக்கான  முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சோதனையை தீவிரப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது .


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்