Skip to main content

மோடியின் சி.பி.ஐ. சொல்லியிருப்பது உலக மகா நகைச்சுவை: கு.செல்வப்பெருந்தகை

Published on 01/03/2018 | Edited on 01/03/2018


 

இந்திரா முகர்ஜி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என்று மோடியின் மத்திய புலனாய்வு துறையில் சொல்லியிருப்பது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (எஸ்.சி.துறை) தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

இந்த நாட்டை கொள்ளையடித்து சூறையாடுபவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியே உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியாத கையாளாகாத பிரதமர் மோடி. உயர்நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாட்டிற்கு சென்று தன் தாய் நாட்டிற்கு திரும்பிவந்தவரை, விசாரணைக்கு பலமுறை அவர் நேரில் சென்று ஆஜராகி இருந்தும் கூட, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி,  விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது மிகவும் வன்மையாக கண்டிக்கக்தக்கது. 

 

p.chidambaram

இந்திரா முகர்ஜி கொடுத்த வாக்கு மூலத்தை வைத்து கைது செய்துள்ளோம் என்று மோடியின் மத்திய புலனாய்வு துறையில் சொல்லியிருப்பது உலக மகா நகைச்சுவையாக இருக்கிறது. 'இந்திரா முகர்ஜி தன் மகளை கொலை செய்தார் என்று கைது செய்து பினையில் இருக்கிறார், வழக்கை எதிர்கொண்டு இருக்கிறார். '
 

மேற்கூறிய இந்திரா முகர்ஜி எப்படிப்பட்ட ஒழுக்கமற்ற நேர்மையற்ற வாழ்க்கையை மேற்க்கொண்டார் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
 

பண மதிப்பிழப்பு ஆகட்டும், ஜி.எஸ்.டி வரி ஆகட்டும், நிதி நிலை அறிக்கை ஆகட்டும் ப.சிதம்பரம் அவர்கள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க திராணியில்லாத அமைச்சர்களை வைத்து கொண்டு, இப்படி எவ்வளவு காலம் பழி வாங்க முடியும். அரசியல் உள் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் மத்திய பாஜக ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறோம். 
 

narandra modi

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பிறகு ஒரு குரல், சமூகநீதி குரலாக இருக்கிறது என்றால் அது ப.சிதம்பரம் அவர்களின் குரல் தான். மக்கள் நலனுக்காக குறிப்பாக ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்து கொண்டிருக்கிறார். 
 

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எப்போதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை உறுத்துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.