Skip to main content

மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்குக் குறி; அத்துமீறும் செவிலியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
male nurse was involved in scamming women who came to the hospital

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது ஆலமரத்துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பாப்பாரப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரர் மனைவியைக் குழந்தைகளுடன் கடத்தியதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

39 வயதான அதியமான் கடத்தூா் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை அதியமான் குறிவைத்து பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவமனையில் செய்து தனது செல்போன் எண்ணை கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளார். எப்போது வேண்டும் என்றாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் என்று நம்பிக்கையானவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதனால், மருத்துவமனைக்கு வரும் பலருடன் அதியமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  அதியமான் நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை இவரிடம் இராணுவ வீரரின் மனைவி, கணவனை இழந்தப் பெண் என மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலைக்காக கொடுத்து இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பலரிடம் அதியமான் கைவரிசை காட்டியிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்களை மட்டும் குறிவைத்து பழகும் அதியமான் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படி, மோசடி பேர்வழியாக இருக்கும் அதியமானுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திசை மாற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலமும் தனியார் மருத்துவமனையில் அதியமான் கமிஷனை பெற்றதை அறிந்த போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி மன்னன் அதியமான் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் 25 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மருத்துவமனை ஊழியா் ஒருவர் பண மோசடி, பாலியல் ஆத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இஸ்டாகிராமில் பெண் போலப் பேசி மோசடி; இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
teenager who collected money by talking like a girl on Instagram

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவர், பெருமா நல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன், இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்காக பாஸ்கரன், தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும், 5ஆம் தேதிக்குள்(இன்று) பணம் கொடுத்துவிடுவதாக ஆகாஷிடம் உறுதியளித்திருந்தாராம். ஆனால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால் பாஸ்கரன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பாஸ்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். 

பின்னர், மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டினுள் பாஸ்கரனை காணவில்லை. மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் பாஸ்கரன் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாஸ்கரனின் தாய் சித்ரா(58) அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.