Skip to main content

மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் வீட்டில் சோதனை

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

makkal neethi maiyam person police search

 

திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் வீட்டில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவரும் தொழிலதிபருமான வீரசக்தி என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர். வீரசக்தி, உணவகம் ஒன்றை நடத்தி வருவதுடன் நியூ மேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக உள்ளார். அந்த நிதி நிறுவனம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக வீரசக்தி உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்