Skip to main content

மதுரை - இன்று ஒரு நாளில் மட்டும் கரோனா தொற்றால் 9 பேர் பலி?

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
government hospital

 

கடந்த வாரம் முதல் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் 24-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மதுரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இருந்தபோதிலும் மதுரை மாநகராட்சி பகுதியில் அதிகளவில் தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாத கர்ப்பிணி உட்பட இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று மட்டும் பத்திரிகையாளர்களில் இரண்டு பேர், காவல் துறையில் 3 பேர், மருத்துவர் செவிலியர் என கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 

சார்ந்த செய்திகள்