Skip to main content

முழு ஊரடங்கு எதிரொலி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்! திடீர் ஆய்வு செய்த பெண் சப்-கலெக்டர்!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
ss


 
கரோனா வைரஸ் எதிரொலி மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஞாயிற்று க்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது.

 

ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான மக்கள் மட்டன், சிக்கன், மீன் போன்ற இறச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில்தான் அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளதால் முதல் நாளான சனிக்கிழமையே மக்கள் இறைச்சிக் கடைகளுக்கு சென்று மட்டன், சிக்கன், மீன் வாங்கி வைத்து கொண்டு மறுநாள் சமைத்து சாப்பிடுவதை நடை முறையாக கடைபிடித்து வருகிறார்கள். 

 

அது போல் தான் திண்டுக்கல் மாநகராட்சி மூலம் மீன் மார்க்கெட் சோலையகால் தியேட்டர் எதிரே செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் வாங்கிச் சென்று தெருக்களிலும் ரோடு ஓரங்களிலும் மீன்களை விற்று வருவது வழக்கம். இப்படி வாங்க க்கூடிய  மீன் வியாபாரிகளுக்கு ஐந்து கிலோ முதல் முப்பது கிலோ வரை   கடைக் காரர்களும் மீன்களை விற்பனை செய்வார்கள்.

 

ssss

 

ஆனால் ஞாயிற்று க்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் வியாபாரிகளும் சரிவர வரவில்லை. ஆனால் பொதுமக்கள் பெருந்திரளாகவே மீன் மார்க்கெட்டுக்கு படையெடுத்து வந்தனர். அதைக் கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த மக்களை நீண்ட வரிசை யில் நிற்க வைத்து பத்து பத்து பேராக மார்க்கெட்டுக்குள் அனுமதித்தனர்.  பொதுமக்களுக்கும் ஒரு கிலோ முதல் பத்து கிலோ வரை குறைந்த விலைக்கு மீன் மார்க்கெட் கடைக்காரர்களும் விற்பனை செய்த தால் பொது மக்களும் போட்டி போட்டு கொண்டு மீன் மார்க் கெட்டுக்கு வந்து சமூக இடை வெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்தும் மீன்களை  வாங்கி சென்றனர்

 

இந்த விஷயம் பயிற்சி் பெண் சப்- கலெக்டர் ஆயிசிங்குக்கு தெரியவே உடனே  மாநகராட்சி  மீன் மார்க்கெட்டுக்குள் அதிரடி ஆய்வு செய்ய வந்தவரை மீன் மார்க்கெட் தலைவர் கே.எம். தனசேகரன். சந்திரன்.தனராஜ் உள்பட மீன் மார்க்கெட்  சங்க நிர்வாகிகளும் போலீஸ் அதிகாரிகளும் வர வேற்றனர்  அதன் பின் சப்-கலெக்டரும் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தார்அதோடு முக கவசம் அணியாத மக்கள் சிலருக்கு முககவசம் அணி யசொல்லி வலியுறு த்தினார்

 

அதுபோல் மீன் மார்க் கெட்டுக்கு வெளியே கடைகள் போட்டு இருந்த சில்லரை மீன் வியாரி களிடமும் முககவசம் அணிசொல்லி அறிவுரை வழங்கியதுடன் மட்டு மல்லாமல் முககவசம் அணியாத சில சில்லறை வியாபாரிகளுக்கு அபதாரமும்  ஸ்பாட்டிலை விதித்தார் அதைக்கண்டு மற்ற சில்லறை மீன்  வியாபாரிகளும் பொது மக்களும்  உஷார் ஆனார்கள் இப்படி திடீ ரென வெளி மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் சப் கலெக்டர் அதிரடியாக மீன் மார்க்கெட்டில்  ஆய்வு செய்தது  மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.