Skip to main content

டாஸ்மாக் கடையில் பணம் மதுபாட்டில்கள் கொள்ளை...

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

Liquor bottles and cash theft from Tasmac store ...
                                                                  மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் கடையில் மேற்பார்வையாளரான ஜெயகாந்தன் விற்பனையாளர்கள் ஆறுமுகம், முருகன், பழனி, சீனிவாசன் ஆகியோர் விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையைமூடி பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

நேற்று காலையில் விற்பனையாளர் ஆறுமுகம், முருகன், பழனி, சீனிவாசன் ஆகியோர் கடையை திறந்தபோது கடையின் பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக மேற்பார்வையாளர் ஜெயகாந்தனுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அவர் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் கடையில் இருந்த ஐந்து பெட்டி மதுபாட்டில்கள், ரூ.3,000 பணம் ஆகியவற்றை சரிபார்த்தபோது ஐந்து பெட்டி குவார்ட்டர் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இதன் மொத்த மதிப்பு 36 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குசச் சென்று பார்வையிட்டு விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இதுசம்பந்தமாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.