Skip to main content

தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திய கி.வீரமணி மற்றும் கே.என்.நேரு

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

k.n.nehru and veeramani pay tribute to thanthai periyar

 

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார்  திருவுருவச் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
“Biography of Father Periyar in Text Book” - Government of Karnataka

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.

Next Story

‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’ ரத்து

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Cancellation of Vaikam Centenary Special Festival

தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா இன்று (28.12.2023) காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருந்தது. இந்த சூழலில் நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டு சென்னை, பெரியார் திடலில் எளிய முறையில் நடைபெற்றது. அப்போது தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் 'தமிழரசு' அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” வெளியிட கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தந்தை பெரியாரின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார். இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ. சாமிநாதன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், திரைக் கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, இன்று (28.12.2023) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.