Skip to main content

சென்னை கொளத்தூரில் உள்ள கே.சி. வீரமணியின் வீட்டில் சோதனை! 

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

KC Veeramani's house in Kolathur, Chennai raided!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். கடந்த சில மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திவருகிறார்கள். அந்த வகையில், கோவையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கரூரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்று (16.09.2021) காலை 7 மணி முதல் முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், கொளத்தூர் விவேகானந்தா நகர், முருகன் கோவில் தெருவில் உள்ள கே.சி. வீரமணியின் அடுக்குமாடி குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே, சென்னை சாந்தோம் லீத்கேஸ்டில் உள்ள கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்