Skip to main content

விஜய்யை சந்திக்கவிடாத பரிதவிப்பில் எழுத்தாளர்! -புரியாத புதிரா புஸ்ஸி ஆனந்த்?

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

kashalin marupakkam book writer complaints on vijay fan committee member anand
                                                       ஏமராஜன்

 

 

நினைத்ததெல்லாம் எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதோ ஒரு விஷயத்தில், தொடர்ந்து ஏமாற்றமும் அலைக்கழிப்புமே மிஞ்சும்.  நாளடைவில்,  அதுவே விரக்தியாகிவிடும். ஏமராஜனின் பரிதவிப்பும்கூட, அந்த ரகம்தான்!

 

யார் இந்த ஏமராஜன்?

 

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏமராஜன், பள்ளிப்படிப்பினைத் தாண்டாதவர். வயிற்றுப்பாட்டுக்காக எலக்ட்ரீஷியன் தொழில் பார்த்து வந்தாலும், பிடிப்பு என்னவோ எழுத்தும் சினிமாவும்தான்! 10 ஆண்டுகளுக்கு முன், ‘காதலின் மறுபக்கம்’ என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ளதெல்லாம், ஒவ்வொன்றாக நடந்து வருகிறது எனப் பட்டியலிடும் அவர், நடிகர் விஜய்யை மனதில் வைத்தே, அந்தக் கதை எழுதப்பட்டதாகச் சிலாகிக்கிறார்.

 

kashalin marupakkam book writer complaints on vijay fan committee member anand

 

‘சுறா’ திரைப்படத்தின் தலைப்பைக்கூட, புரட்சிப்பூக்கள் புரொடக்ஷன் என்ற தனது கம்பெனியின் பெயரில், 2003-ல் பதிந்து வைத்ததாகவும்,  2004-ல்  மறுபதிவு செய்ததாகவும், ஏழ்மைச் சூழலில் பதிவைத் தொடராத நிலையில், 2010-ல் விஜய் நடித்த 50-வது படமாக சுறா வெளிவந்தது என்று பெருமூச்சுவிடும் ஏமராஜன், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யை சந்திப்பதற்கு முயற்சித்து வருவதாகவும், தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டையாக சிலர் இருந்துவருகிறார்கள் என்றும் வேதனையை வெளிப்படுத்தினார்.


“ஒருமுறை, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம், விஜய்யை நேரில் சந்தித்து காதலின் மறுபக்கம் புத்தகத்தை அவர் கையில் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அப்போது, தனது இரண்டு செல்போன் நம்பர்களை, தன் கைப்பட எழுதிக்கொடுத்த புஸ்ஸி ஆனந்த், தற்போது நான் அழைத்தால் ‘அட்டென்ட்’ பண்ணுவதே இல்லை. ‘மரணம் என்னை ஜெயிப்பதற்கு முன் விஜய்யை ஒரு தடவையாவது சந்தித்துவிட வேண்டும்’ என்று கடிதம்கூட எழுதினேன். நோ ரெஸ்பான்ஸ். நான் மட்டுமல்ல, விஜய் மன்றத்தினரின் அழைப்பும்கூட, அவரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..” என்று குறைப்பட்டுக்கொண்டார்.

 

kashalin marupakkam book writer complaints on vijay fan committee member anand
                                                     புஸ்ஸி ஆனந்த்

 

எஸ்.ஏ.சந்திரசேகரும்கூட,  ‘விஜய்யை சுற்றி சில விஷச்செடிகள் இருக்கின்றன. அதனால்தான் எனக்கும் விஜய்க்கும் இந்த அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுவிட்டது..’ என்று குற்றம் சாட்டிருந்தார்.

 

எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஏமராஜன் போன்றோரின் ஆதங்கம் குறித்து கேட்பதற்காக, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்ந்து தொடர்புகொண்டோம். நமது லைனுக்கே வரவில்லை. குறுந்தகவலும் அனுப்பினோம். பதில் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.