Skip to main content

டைலர் மர்ம மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

karur passed away kumar relative struggle

 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்து, கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமார்(28). இவர் ஈரோட்டில் டைலராக உள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், தனுஸ்ரீ என்ற 8 வயது மகளும் உள்ளனர். குமார் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோட்டில் டைலராக  வேலை பார்த்து வருகிறார். தனது சொந்த ஊரான கல்லுப்பட்டியில் உறவினர் இறந்த துக்க காரியத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். அன்று  இரவு 9 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவா என்பவரை அழைத்து வருவதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன்  இருசக்கர வாகனத்தில் மனவாசி டோல் பிளாசா  சென்றதாக கூறப்படுகிறது.

 

பின்னர் அவர்   கரையான்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் உடலில் காயங்களுடன் சடலமாக  கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக நேற்று அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது வரை குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி இறந்த கருப்பையா (எ) குமாரின்  சடலத்தை வாங்காமல் உறவினர்கள் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.